6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஈரோடு இளைஞர் மீண்டும் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 12:21 pm

DIN

கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஈரோடு இளைஞர் மீண்டும் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 64 பேரும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 4 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு இளைஞரும் சிகிச்சை பெற்றனர். இதில் இன்று வரை 65 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் திருச்சியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய இளைஞருக்கு கடந்த 2 நாட்களாக சளி தொல்லை இருந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து நேற்று சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞருக்கு தீவிர பரிசோதனை நடைபெற்று வருகின்றது. 

ரத்த மாதிரிகளை சேகரித்துள்ள மருத்துவர்கள், சாதாரண சளியா அல்லது மீண்டும் கரோனா பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்த பரிசோதனைக்காக இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் முடிவடைந்ததும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றனர்.

தச்சு தொழிலாளி குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி: 
சென்னிமலை முகாசிபிடாரியூரை சேர்ந்த தச்சு தொழிலாளி ஒருவர் மதுரையில் தங்கி பணியாற்றி வந்தார். ஊரடங்கு காரணமாக அண்மையில் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அடுத்தடுத்து காய்ச்சல் வந்ததையடுத்து, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.