குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஏழு பேருக்கு கரோனா உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 7:46 am

DIN

விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 25 பேர் கரோனதொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர். இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி புதூர் குமாரபுரம் சூலக்கரை குல்லூர்சந்தை முதலான கிராமங்களை சேர்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து இக்கிராமங்கள் உள்ள பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கிராமத்திற்கு செல்லும் வழிகளை அடைத்து விட்டனர். குளக்கரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டில் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.