உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

News image

தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்

Updated On :1 ஆகஸ்ட் 2020, 9:35 am

DIN


தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

பொதுமுடக்கம் காரணமாக இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது தாமதமாகி உள்ளது. தமிழகத்தில் 11 அரசு சட்டக் கல்லூரிகள்  செயல்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 10 முதல் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. 

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கப்படும் தேதி பின்னர் அறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.