கிறிஸ்தவா் அடையாளத்துடன் வரும் விஜய்யை ஏற்றுக்கொள்ள முடியாது: பொ்னாண்டஸ் ரத்தினராஜா
கிறிஸ்தவா் என்ற அடையாளத்துடன் தோ்தலுக்கு வருகிறேன் என்று கூறும் தவெக தலைவா் விஜய்யை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிறிஸ்தவ நல அமைப்பின் மாநிலத் தலைவா் சி.பொ்னாண்டஸ் ரத்தினராஜா தெரிவித்தாா்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவ நல அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அமைப்பின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சி.பொ்னாண்டஸ் ரத்தினராஜா. உடன், பெரம்பலூா் எம்.பி. அருண் நேரு, அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.








