தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகளின் கூட்டம் : விவசாயிகள் அச்சம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகளின் கூட்டம் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஆகஸ்ட் 2020, 12:26 pm

கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகளின் கூட்டம் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரானா தொற்று பாதிப்பால் கொடைக்கானலில் பொதுமக்கள் அச்சமடைந்து எந்த பணிகளையும் முழுமையாக செய்ய முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி.பட்டி, பெரும்பாறை, கெளரவநாச்சி ஓடை,பாச்சலுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது வாழை, பலா, அவக்கோடா, அவரை உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. 

இதனால் வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களில் விளைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு யானைக்கூட்டம், பன்றி, காட்டெருமைகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது.

இதனால் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், அவற்றை வெளி சந்தைக்கு அனுப்ப முடியாமலும்  விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வனவிலங்குகள் தற்போது விவசாயப் பகுதிகளில் முற்றுகையிட்டு பழங்கள்,காய்கறிகளை அழித்து நாசப்படுத்தி வருகிறது.

இதனால் விவசாயிகள் உயிருக்கு பயந்து விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் அச்சமடைந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இது குறித்து பெரும்பள்ளம் சரகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, “கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர்ந்து, மழை பெய்து வருகிறது. எனவே இந்த வன விலங்குகள் உணவைத் தேடி விவசாய பகுதிகளுக்கு வருகின்றன. இருப்பினும் வனத்துறை மூலமாக காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டாம் என தெரிவித்துள்ளோம்.”  என்றார்.

ஏற்கனவே கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரங்களை இழந்து சிறு,குறு விவசாயிகள் வறுமையில் வாடிவருகிறோம்.சேதமடைந்த  விவசாய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் என்பது கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.