ஹிந்துக்களை ஜாதிப்பாகுபாடு இல்லாமல் ஒன்றிணைத்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், நிகழாண்டு கரோனா தொற்று நோய் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தமிழகம் முழுவதிலும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஆகஸ்ட் 22 ஆம் தேதி சுமார் 1.5 லட்சம் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள ஹிந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் காப்புக் கட்டிக் கொள்ளுவது, மாலை அணிந்து கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பகுதிவாரியாக சமூக இடைவெளியுடன் நடைபெறும். பொது ஊர்வலம், பொது நிகழ்ச்சி கிடையாது.