எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
அதேவேளையில் மருத்துவக் குழுவினா் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
இதயம் கவரும் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பாட்டுப் பயணத்தைத் தொடரட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...