தமிழக வணிக வரித் துறை செயலர் பீலா ராஜேஷ் தந்தையின் மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை இயக்குநரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராணி வெங்கடேசனின் கணவரும், வணிக வரித்துறை செயலர் பீலா ராஜேஷின் தந்தையுமான S.N.வெங்கடேசன் இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.
அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்."