சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட இந்திய காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.
ஆத்தூர் உடையார்பாளையம் காந்தி சிலை முன்பிருந்து பேரணி புறப்பட்டது. சிறப்பு விருந்தினராக மாநில செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, மாவட்ட துணை பொதுச்செயலாளர்கள் குமார், ஜி.பாஸ்கர், விவசாய அணி மாவட்ட தலைவர் கல்லை கருப்பண்ணன், சக்ரவர்த்தி, பெரியசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.