நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடபெறவுள்ளது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டடுள்ளது.
தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இதில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...