சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுருளி அருவி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன், 4 நாய்கள் பலி

தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே மர்மமான முறையில் இளைஞர் மற்றும் 4 நாய்கள் இறந்து கிடந்தது புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
சுருளி அருவி அருகே மர்மமான முறையில் இறந்து கிடக்கும் இளைஞர் மற்றும் நாய்.
Updated On :27 ஜனவரி 2024, 6:00 pm

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அருகே மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உள்பட 4 நாய்களும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி வனப்பகுதி அருகே வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், ஒருவர் இறந்து கிடப்பதும், அருகருகே  4 நாய்கள் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். இது பற்றி வனத்துறை, ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உத்தமபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ந.சின்னக்கண்ணு, காவல் ஆய்வாளர் கே.சிலைமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பரமன் மகன் தினேஷ்(16) என்றும், பால் வியாபாரம் செய்து வருபவர் என்றும், அவரது அருகில் இறந்து கிடந்தது, வேட்டைக்கு செல்லும் நாய்கள் என்று தெரிய வந்தது.  அதற்குள் இறந்த சிறுவனின் உறவினர்கள் கூடினர். போலீசார் சிறுவனின் உடலை எடுக்க விடாமல், இறந்த காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வாக்குவாதம் செய்தனர்.

துணைக்காவல் கண்காணிப்பாளர் ந.சின்னக்கண்ணு அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி, இறந்த சிறுவன் பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

YouTube video thumbnail

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது: சுருளி மலை அடிவாரப்பகுதியில் விளை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் மான், யானை, பன்றி, கரடி போன்றவை இரவு நேரங்களில் இரை தேவைக்காக உள்ளே புகுந்து சாப்பிடுவதோடு, பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அதனால் நில உரிமையாளர்கள், அனுமதியின்றி, விளை நிலங்களைச் சுற்றி மின்சார வேலி அமைத்து, இரவில் இணைப்பு கொடுத்து விட்டு, காலையில் வந்து துண்டித்து விடுவர். அதே நேரத்தில் சிறுவனுடன் சிலர் 4 நாய்களுடன் வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர். 

அப்போது மின்சாரம்  தாக்கி இறந்திருக்கலாம். இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது, உடன் சென்றவர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இறந்த 4 நாய்களும் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு விசாரணை செய்யப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.