புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 10 வீடுகள் சேதமடைந்துள்ள. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரெவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் திண்டிவனம் அருகே நெய்குப்பி நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.