திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தொடர் மழை... திண்டிவனம் அருகே 10 வீடுகள் சேதம்

புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 10 வீடுகள் சேதமடைந்துள்ள. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. 

News image

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை

Updated On :4 டிசம்பர் 2020, 11:47 am IST


புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 10 வீடுகள் சேதமடைந்துள்ள. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. 

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரெவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனால் திண்டிவனம் அருகே நெய்குப்பி நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.