வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா விடுப்பில் இருந்துவிட்டு மீண்டும் கல்லூரிக்கு செல்ல பயந்து காணாமல்போன மாணவர் மீட்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் காணாமல்போன மாணவரை கெங்கவல்லி போலீசார் மீட்டுள்ளனர். 

News image
நிஷாந்த்
Updated On :5 டிசம்பர் 2020, 6:29 am

DIN


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் காணாமல் போன மாணவரை கெங்கவல்லி போலீசார் மீட்டுள்ளனர். 

கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் நிஷாந்த்(19) பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டயப்படிப்பான டி.பார்ம் படித்து வருகிறார்.

இந்நிலையில், கரோனா விடுப்பில் வீட்டில் ஜாலியாக இருந்துள்ள நிஷாந்த், டிசம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து நிஷாந்த் கடந்த நவ.29 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர், வீட்டிற்கு திரும்பவரவில்லை. 

இதனைத் தொடர்ந்து நிஷாந்த்தின் தந்தை,கெங்கவல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார், மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நிஷாந்த் வெள்ளிக்கிழமை காலை திருவண்ணாமலையில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று மாணவரை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

மாணவரிடம் போலீசார் விசாரித்ததில் தான் மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்கு பயந்து வீட்டை வெளியேறியதாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.