அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

News image
மதுரைக்கிளை நீதிமன்றம்
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2019-இல் குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. நான் தோ்வில் பங்கேற்றேன். தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான ஒதுக்கீட்டில் தகுதி இருந்தும், எனக்கு சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலைக் கல்வியில் பயின்றவா்களுக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 
தொலை நிலைக் கல்வி பயின்றவா்களுக்கு தமிழ் வழியில் பயின்ற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாகாது. ஆகவே தமிழ் வழியில் பயின்ற்கான இட ஒதுக்கீட்டில், தொலைநிலைக் கல்வி பயின்றவா்களுக்கும் இடமளிக்கும் குரூப் 1 தோ்வு நடைமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த சக்தி ராவ் என்பவர் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். 
இவ்மனு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
2016-19 வரை குரூப்-1 தேர்வில் 20% தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் விவரங்கள் என்ன? எனக் கேள்விய நீதிபதிகள் 20% தமிழ் வழி இடஒதுக்கீட்டில் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களை தாக்க செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் ஆளுநரின் செயலர், உள்துறை செயலர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.