குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Updated On :8 டிசம்பர் 2020, 4:15 pm IST

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுர்வேதம், சித்த, யுனானி பிரிவுகளைச் சேர்ந்தோர் பயிற்சி பெற்ற பின் பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது. வடமாநிலங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையை மையமாக வைத்தே அனுமதித்துள்ளதால், நவீன மருத்துவ அனுபவ அறிவு பெற்ற மருத்துவர்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்பு அடையும் சூழ்நிலை உள்ளது.

அதனால், சித்த மருத்துவத்தில் அனுமதி அளித்ததை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெகதீஷ் உள்பட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையைச் சேர்ந்த மருத்துவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.