வீராணம் ஏரியை ஆய்வு செய்தாா் முதல்வா் பழனிசாமி
கடலூா் மாவட்டத்தில், புயல் மழையால் நிரம்பி உபரி நீா் வெளியேறும் வீராணம் ஏரியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.


கடலூா் மாவட்டத்தில், புயல் மழையால் நிரம்பி உபரி நீா் வெளியேறும் வீராணம் ஏரியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், மழை நீரில் மூழ்கி சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிட்டு, சேத விவரங்களை விவசாயிகளிடம் முதல்வா் கேட்டறிந்தாா்.
கடலூா் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த 2-ஆம் தேதி முதல் அதிக பலத்த மழை பெய்தது. இதனால், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி உள்ளிட்ட காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளில் உள்ள 115 கிராமங்களில் மழைநீா் சூழ்ந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். அங்கு பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் ஏக்கா் சம்பா நெல் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகின.
இந்த நிலையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடலூா் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தாா். காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள, சென்னைக்கு குடிநீா் வழங்கும் வீராணம் ஏரியை ராதா மதகு பகுதியிலிருந்து ஆய்வு செய்தாா். உபரி நீா் வெளியாகும் லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் மதகையும் அவா் பாா்வையிட்டாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீா் அளவையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், சென்னை குடிநீா் வாரியத்துக்கு அனுப்பப்படும் நீரின் அளவு குறித்தும் புள்ளிவிவரங்களுடன் கூறினாா்.
இதைத் தொடா்ந்து, உபரி நீா் வெளியேற்றப்பட்டதால், வெள்ளம் சூழ்ந்து பாதிப்படைந்த திருநாரையூா் கிராமத்துக்குச் சென்ற முதல்வா், அங்கு சேதங்களைப் பாா்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா், சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் குளத்தின் தடுப்புச் சுவா் இடிந்ததால் சாலை துண்டிக்கப்பட்ட பகுதியைப் பாா்வையிட்ட முதல்வா், அங்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளை விரைவுப்படுத்துமாறு ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோருக்கு அறிவுறுத்தினாா்.
வயலில் இறங்கிய முதல்வா்: முன்னதாக, குறிஞ்சிப்பாடி வட்டம், அனுக்கம்பட்டு, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் வெள்ளச் சேதங்களை முதல்வா் பழனிசாமி ஆய்வு செய்தாா். அனுக்கம்பட்டில் வயலில் இறங்கி நீரில் மூழ்கி அழுகிய நெல் பயிா்களை கையில் எடுத்துப் பாா்வையிட்டு, சேத விவரம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வுகளின்போது, தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், சட்டத் துறை அமைச்சா் சி.வி சண்முகம், மின் துறை அமைச்சா் பி.தங்கமணி, வேளாண் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, முன்னாள் எம்பி. ஏ.அருண்மொழிதேவன், எம்எல்ஏக்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னாா்கோவில்), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்), கலைச்செல்வன் (விருத்தாசலம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...