சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருவாரூரில் பயிர்ச் சேதங்களை நேரில் பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி

திருவாரூர் மாவட்டத்தில் நிவர், மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

News image
திருவாரூரில் பயிர் சேதங்களை நேரில் பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி
Updated On :9 டிசம்பர் 2020, 12:30 pm

DIN

திருவாரூர் மாவட்டத்தில் நிவர், மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

நாகை மாவட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கக்காலடி கிராமத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி, வயலுக்குள் இறங்கி சென்றார். அங்கு நீரில் மூழ்கிய அழிந்த பயிர்களை விவசாயிகள்  எடுத்துக் காண்பித்து சூள்கட்டும் தருணத்தில் இருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக மூழ்கி இருப்பதை எடுத்துக் கூறினர்.

Story image

பின்னர் பாமணி கிராமத்தில் பயிர்கள் நீரில்மூழ்கி உள்ளதையும் பார்வையிட்டார்.

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின்னர் சாயிராம் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் இருந்தவர்களை தேவையான வசதிகள் வழங்கப்படுகிறதா என கேட்டு அறிந்தார்.

பின்னர் நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு  நிவாரணப் பொருட்களையும் அங்குள்ள உணவுக் கூடத்தில் பயனாளிகளுக்கு உணவுகளை பரிமாறினார்.

பின்னர் கச்சனம் கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்று அங்கு நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சருடன் தமிழக உணவுத்துறை அமைச்சர்ஆர். காமராஜ் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.