ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: தமிழிசை

கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என தெலுங்கானா  ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

News image

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :13 டிசம்பர் 2020, 11:05 am

காஞ்சிபுரம்: கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என தெலுங்கானா  ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தாதாச்சாரியார் சாற்றுமுறை திருநாளை முன்னிட்டு உற்சவர் தேவராஜ சுவாமி முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலுக்கு சுவாமி தரினசனம் செய்ய வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

'உலகின் பிடியிலிருந்து கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் என்பது முழுவதுமாக விலகிட வேண்டும் என்றும், விரைவில் தடுப்பூசியின் பயன்பாடு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன்.

கரோனாவின் மூலம் இறைவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நம்மை எச்சரித்திருக்கிறார். இறை வழிபாடு அவசியம். அதேநேரத்தில் நாம் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

கரோனா நோய்த்தொற்றின் தாக்க தொடக்க காலத்தில் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை நாம் இறக்குமதி செய்தோம். ஆனால் இன்று தினசரி சுமார் 3 லட்சம் முகக்கவசங்களை நாம் தயாரிக்கிறோம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதியாகிறது. பல நாடுகள் தடுப்பூசியை தயாரிப்பதிலும், விற்பனை செய்வதிலும் மிகுந்த ஆர்வமாக உள்ளன. ஆனால் இந்தியாவோ எல்லாவற்றுக்கும் தலைமை தாங்கும் வகையில் இருந்து வருகிறது. தடுப்பூசியை தேவையான எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் சக்தி இந்தியாவில் மட்டுமே உள்ளது என ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் தெரிவித்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.

பிரதமர் மோடி மூன்று தடுப்பூசி நிறுவனங்களுக்குச் சென்று அவற்றை ஊக்கப்படுத்தியிருக்கிறார். கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தடுப்பூசியை கண்டறிவது மிக முக்கியம் என்றாலும் பாதுகாப்பு  மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் பற்றிய அனைத்து விபரங்களையும் நாம் தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

பேட்டியின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.சாமுண்டீஸ்வரி, பாஜக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் பாபு, துணைத் தலைவர்கள் ஓம்.சக்தி பெருமாள், வாசன், நகர் தலைவர் அதிசயம், குமார் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.