இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருப்பூரில் 2ஆவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம்: 61 விவசாயிகள் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் 2 ஆவது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 61 விவசாயிகளைக் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
திருப்பூரில் 2ஆவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம்
Updated On :15 டிசம்பர் 2020, 11:32 am

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் 2 ஆவது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 61 விவசாயிகளைக் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:

தில்லியில் அகிம்சையான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும். 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெறும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என்றனர். 

இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற 61 பேரை கைது செய்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.