ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மக்கள் பிரச்னைக்காக ரஜினியுடன் ஒத்துழைப்பேன்: கமல்ஹாசன்

மக்கள் பிரச்னைக்காக நானும், ரஜினியும் ஒத்துழைப்போம் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

News image
கமல்ஹாசன்
Updated On :15 டிசம்பர் 2020, 10:38 pm

DIN

மக்கள் பிரச்னைக்காக நானும், ரஜினியும் ஒத்துழைப்போம் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
 கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கமல்ஹாசன் கூறியது: எனது சுற்றுப்பயணத்துக்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்து, பின்னர் மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏன் முதலில் அனுமதி கொடுத்தார்கள், பின்னர் மறுத்தது ஏன்?.
 வேட்பாளர்களுக்கு வெறும் பண பலம், படிப்பு மட்டும் இருந்தால் போதாது. மக்கள் சேவையில் அக்கறை இல்லாதவர்கள் வேட்பாளராக வருவதில் அர்த்தம் இல்லை. எல்லாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். புதிதாக வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகின்றனர். நான் ஏன் வந்தேன் என்பதற்கான காரணத்தை சொல்லிவிட்டேன். ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதனை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது கொள்கை குறித்து இன்னும் தெளிவாகச் சொன்ன பிறகு பேசுவோம். நட்பு என்பது எங்களுக்குள் எளிதான ஒன்று. தொலைபேசியில் தொடர்புகொண்டால் கிடைக்கக் கூடியவர்கள். கொள்கைரீதியாக ஒத்துவந்தது என்றால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். அதேவேளையில் மக்கள் பிரச்னைக்காக, மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து ஒத்துழைப்போம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.