மக்கள் பிரச்னைக்காக நானும், ரஜினியும் ஒத்துழைப்போம் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கமல்ஹாசன் கூறியது: எனது சுற்றுப்பயணத்துக்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்து, பின்னர் மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏன் முதலில் அனுமதி கொடுத்தார்கள், பின்னர் மறுத்தது ஏன்?.
வேட்பாளர்களுக்கு வெறும் பண பலம், படிப்பு மட்டும் இருந்தால் போதாது. மக்கள் சேவையில் அக்கறை இல்லாதவர்கள் வேட்பாளராக வருவதில் அர்த்தம் இல்லை. எல்லாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். புதிதாக வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகின்றனர். நான் ஏன் வந்தேன் என்பதற்கான காரணத்தை சொல்லிவிட்டேன். ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதனை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது கொள்கை குறித்து இன்னும் தெளிவாகச் சொன்ன பிறகு பேசுவோம். நட்பு என்பது எங்களுக்குள் எளிதான ஒன்று. தொலைபேசியில் தொடர்புகொண்டால் கிடைக்கக் கூடியவர்கள். கொள்கைரீதியாக ஒத்துவந்தது என்றால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். அதேவேளையில் மக்கள் பிரச்னைக்காக, மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து ஒத்துழைப்போம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாமக கொடி, சின்னம் விவகாரம்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு

மாருதி சுஸுகிக்கு ரூ.5,786 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

