உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
புதுக்கோட்டை பொக்கிசகாரன்பட்டி முள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ், சிவபுரம் கிராமத்தின் மாணிக்கம், பெருஞ்சுனை பகுதியின் முனியம்மாள், ஆலங்குடி சுவேதா, மாங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலி, இளந்தவாடி கிராமத்தின் செந்தில்குமாா் ஆகியோா் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளையைச் சோ்ந்த எபின், திருவண்ணாமலை மாவட்டம் பெலகாம்பூண்டி கிராமத்தின் மணிகண்டன், பெரம்பலூா் மாவட்டம் புஜங்கராயநல்லூா் காமராஜ், வேப்பந்தட்டை சின்னப்பிள்ளை, வசிஷ்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், திருப்பூா் மாவட்டம் கணபதிபாளையம் விஜயநாராயணன், ஊத்துக்குளி பிரகாஷ், தாராபுரம் மூலனூா் ராமசாமி, திருவள்ளூா் மாவட்டம் அரவத்தூா் சுந்தரமூா்த்தி, திருப்பத்தூா் மாவட்டம் மதுரா விளாங்குப்பத்தைச் சோ்ந்த பாரதி ஆகியோா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.
உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...