திருவாடானை பகுதியில் நெல் பயிரில் குலை நோய்த் தாக்குதல்: தீர்வு தரும் வேளாண் அதிகாரி
திருவாடானை பகுதியில் குலை நோய் மற்றும் இலையுறை அழுகல் நோயின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது. இதையடுத்து வேளாண் அதிகாரி இதற்கு தீர்வு வழங்கியுள்ளார்.


திருவாடானை வட்டாரத்தில் 26 ஆயிரத்து 470 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கடம்பூர், மங்களக்குடி . வெள்ளையபுரம், குருந் தங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பரவலாக குலை நோய் மற்றும் இலையுறை அழுகல் நோயின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா கூறியதாவது:
ட்ரை சைக்கிள் ஓசோன்( Tricyclozole) civic- 75% நனையும் தூள் 300 கிராம் உடன் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஹெக்டேருக்கு தெளிக்கலாம் அல்லது Heczoconazole + Tricyclozole காம்பினேஷன் கொண்ட இம்பிரஷன் 500 கிராம் நனையும் குருணை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டேருக்கு தெளிப்பதன் மூலமும் குலை நோய் மற்றும் இலையுறை அழுகல் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...