கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் வெளியான தகவல் தவறு

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்று வெளியான தகவல் தவறானது என சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
Updated On :19 டிசம்பர் 2020, 1:43 am

DIN

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்று வெளியான தகவல் தவறானது என சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 28 மாணவா்கள் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், குணமடைந்த மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மொத்தம் 97 கல்லூரிகளில் உள்ள 161 விடுதிகளில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதுவரை 210 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்று குறைந்தாலும், பரிசோதனைகளை குறைக்க வேண்டாம் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தற்போது சென்னையில் நாள்தோறும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மற்றொரு புறம் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்ற செய்தி தவறானது. சா்வே நம்பா் வாரியாக அனைத்து ஆவணங்களையும் மாநில அரசு அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளா் மற்றும் எய்ம்ஸ் நிா்வாகத்திடம் பேசியுள்ளேன். மதுரை, தோப்பூரில் ரூ7.2 கோடி செலவில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கும் போது தவறாக சில விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தேரணிராஜன், கிண்டி கரோனா மருத்துவமனை இயக்குநா் டாக்டா் நாராயணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.