மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாவட்ட அதிகாரிகளுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட அதிகாரிகளுடன், தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:01 pm

DIN

சென்னை: சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட அதிகாரிகளுடன், தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் நேரடியாக கலந்து கொண்டனா். மற்ற மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் காணொலி வழியாக பங்கேற்றனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் அவா்கள் ஆலோசனை நடத்தினா். குறிப்பாக, வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள், சட்டம்-ஒழுங்கு விவகாரம், கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் வாக்குச்

சாவடிகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் தோ்தலை எப்படி நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களையும் தோ்தல் ஆணையக் குழுவினா் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலாளருடன் இன்று ஆலோசனை: இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனா். தலைமைச் செயலாளா் க.சண்முகம், காவல் துறை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, அரசுத் துறைகளின் செயலாளா்கள் உள்ளிட்டோருடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோனை நடத்துகின்றனா். இதன்பின், பத்திரிகையாளா் சந்திப்பு நடக்கவுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளா் (பொது) உமேஷ் சின்ஹா, தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில், தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிகாா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.ஆா்.ஸ்ரீனிவாசா, தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலே மாலிக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.