திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை...
அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நிறைவற்றப் போகும் 7 அம்ச திட்டத்தை அறிவிப்பதில் பெருமையடைகிறேன். எனது 5 வயது முதல் 60 வயது வரை என் மீது புகழ் வெளிச்சம் விழுந்தது. ஆனால் நான் அரசியலுக்கு வந்த பிறகு தமிழக மக்கள் என் மீது காட்டும் அன்பு அதை விட அளவிட முடியாததாகவே இருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி சேரப்போவதில்லை. ஊழல்களை ஒழித்தாலே தற்போதிருக்கும் தமிழகத்தை விட 4 மடங்கு வளர்ச்சியடையச் செய்ய முடியும். தலைமை நேர்மையாக இருந்தால் சொல்வது எதையும் செய்து விட முடியும். 7 அம்சத் திட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா என்று கேட்டால் ஊழலை ஒழித்தாலே அனைத்தும் சாத்தியாகி விடும் என்றும் பேசினார்.