முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பணியாற்ற இடைக்காலத் தடை

மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பணியாற்ற இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 9:31 pm

DIN

மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பணியாற்ற இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை விளாங்குடியைச் சோ்ந்த பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு:

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவோா் மீது 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு ஜாமீன் வழங்கப்படும்.

இந்நிலையில் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பணியாற்றி வரும் சீதாராமன், குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைத் தாமதப்படுத்தி வருகிறாா்.

இதுதொடா்பான வழக்கு ஒன்றில் சீதாராமனை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் எச்சரித்துள்ளாா். இருப்பினும் போதைப்பொருள் தொடா்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டு வருகிறது. எனவே சீதாராமனை நீக்கிவிட்டு நோ்மையான வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக சீதாராமன் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிா்மனுதாரராகச் சோ்க்கிறது. வழக்குரைஞா் சீதாராமன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (டிசம்பா் 23) ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.