

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில், ரூ.7.78 இலட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தார்.
அவரிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது லேப்டாப் பை மற்றும் பார்சலில் 6,600 யூரோக்கள், 2000 இங்கிலாந்து பவுண்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.7.78 இலட்சம்.
இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.