நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜன. 3-ல் ஆலோசனை: ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரைக்கு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

News image

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (கோப்புப்படம்)

Updated On :25 டிசம்பர் 2020, 8:11 am

DIN

தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரைக்கு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரையில் ஜனவரி 3-ஆம் தேதி ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆதரவாளா்கள் கூறும் முடிவுக்கேற்ப அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்.

ஆதரவாளர்கள் கட்சி தொடங்கச் சொன்னாலும், தொடங்குவேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் ஆலோசனைக்கு ஆதரவாளர்கள் அனைவரும் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.