ரஜினிகாந்த் வீடு திரும்புவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஜினியின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும், அவருக்கு இன்று (டிச.26) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இது தொடா்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நடிகா் ரஜினிகாந்துக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் அவரின் ரத்த அழுத்தம் சீராக இல்லை. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் வகையில் இன்று மருத்துவமனையில் இருப்பார் என்றும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
சின்னருக்கு ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டம்! அல்கராஸை வீழ்த்தி மான்டிகாா்லோவில் சாம்பியன்!

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


