இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 டிசம்பர் 2020, 1:25 pm


பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதில் பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கான கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,009 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,14,170 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 1,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,93,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய அறிவிப்பில் மேலும் 10 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,069 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 8,947 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் பிரிட்டனிலிருந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 நண்பகல் வரை ஏறத்தாழ 2,300 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். அதில் 1,437 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1,224 பயணிகளுக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 201 பயணிகளின் பரிசோதனை முடிவு வரவில்லை. மீதமுள்ள பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

இன்றைய நிலவரப்படி பிரிட்டனிலிருந்து வந்து கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்டவாரியாக:

சென்னை -5
தஞ்சாவூர் - 3
நீலகிரி - 2
தேனி - 1
மதுரை - 1
செங்கல்பட்டு - 1

பிரிட்டனிலிருந்து கரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேருடன் தொடர்பிலிருந்த 93 பேரில் 12 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 5 பேரின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

பிரிட்டனிலிருந்து திரும்பி கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.