தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் 

தமிழகம் முழுவதிலும் திருவாதிரையை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.

News image

திருவாதிரையையொட்டி  ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு 11 கிலோ சந்தனம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்த  மடவார்வளாகம் நடராஜர்.

Updated On :30 டிசம்பர் 2020, 6:21 am

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் முழுவதிலும் திருவாதிரையை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை திருவாதிரை முன்னிட்டு சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது

அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் அதன்படி புதன்கிழமை அதிகாலையிலேயே சமூக இடைவெளியுடன் ஆருத்ரா தரிசனம் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பாக காத்திருந்தனர்

இதனைத்தொடர்ந்து வைத்தியநாதசாமி கோவிலில் உள்ள நடராஜருக்கு சுமார் 11 கிலோ சந்தனம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் நடராஜர் காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை வைத்தியநாதசுவாமி கோவில் தக்கார் இளங்கோவன் நிர்வாக அதிகாரி ஜவஹர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.