டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபான விலை உயர்வு
டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.


டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விலை உயர்வானது வெள்ளிக்கிழமை (பிப். 7) முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, தற்போது விற்பனையாகும் விலையை விட கூடுதலாக குவாட்டர் ரூ.10, ஆஃப் ரூ.20, ஃபுல் ரூ.40, பீர் ரூ.10 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...