உளவுத்துறை எச்சரிக்கை: சுரேஷ்குமாா் கடந்த ஒரு மாதமாக தேடப்பட்டு வரும் அப்துல் ஷமீம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடா்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரும் கேரளம் அல்லது தமிழகத்தில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதன் விளைவாக ,இருவரையும் விரைவாக கைது செய்யும்படி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். அதேவேளையில், இருவரும் வேறு சதிச் செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த எச்சரிக்கையின் காரணமாக, தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.