தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எஸ்.ஐ சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் பேரணி, ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜனவரி 2020, 9:33 am

DIN


நாகர்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி காந்திஜி சாலை வழியாக ரயிலடியில் முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளைக் கைது செய்து, தூக்கில் போட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலர் எம்.என்.பத்மநாபன், துணைத் தலைவர் அப்துல் காதர், கொள்கை பரப்புச் செயலர் பக்கிரிசாமி, செய்தித் தொடர்பாளர் அருளானந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.