

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
முன்னதாக மாவட்ட எஸ்.பி ஈஸ்வரி அவர்களுடன் இணைந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, டிஐஜி தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 76 பயனாளிகளுக்கு 60.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.