திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முழு விவரங்கள் கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திமுக முதன்மைச் செயலர் கே.என்.நேரு தலைமையில், திமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
எம்எல்ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கே.என். நேரு உள்ளிட்டோர் அளித்த மனுவில் கரோனா பாதிப்பு, சிகிச்சை, வசதிகள், குணமடைந்தோர், உயிரிழந்தோர் உள்ளிட்ட 8 கேள்விகளுக்குப் பதில் கோரப்பட்டுள்ளது. ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த பிறகு மனு தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு கே.என். நேரு விளக்கம் அளித்தார்.