மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காவல் நண்பர்கள் குழுவை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காரைக்குடியில் ஏஐஒய்எப் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

News image
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்
Updated On :7 ஜூலை 2020, 10:47 am

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தில் சாத்தான்குளம் காவல் துறையின் அராஜகப் போக்கை கண்டித்தும், காவல் துறையில் உள்ள காவல் நண்பர்கள் குழு (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ) தமிழகம் முழுவதும் கலைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சிவகங்கை மாவட்டச் செயலாளர் சிவாஜி காந்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ரிச்சர்ட் அருண், துரை, விக்னேன், கென்னடி, முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.