சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நெல்லையில் 2ஆவது நாளாக கனமழை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் கனமழை பெய்தது.

News image
திருநெல்வேலி நகரத்தில் பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.
Updated On :20 ஜூலை 2020, 1:21 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் கனமழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மற்றும் மலையடிவார பகுதிகளில் சில நாள்களாக பெய்தது. திருநெல்வேலி மாநகரில் பருவமழை தாமதத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. பாளையங்கால்வாய் பாசன பகுதிகளில் கார் பருவ சாகுபடியும் பொய்த்துப் போனது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை காலையிலும் திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாநகரில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. திருநெல்வேலி அருகேயுள்ள கல்லூர், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூர், கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.  

திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவே நகர்ந்து சென்றன. திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், சிந்துபூந்துறை பகுதிகளில் முறையாக வடிகால் ஓடைகள் சீரமைக்கப்படாததால் மழைநீர் அதிகளவில் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து கழிவுநீர் ஓடைகளையும் விரைவாக சீரமைக்கவும், அடைப்புகளை நீக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நான்குனேரியில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: 

நான்குனேரி- 30, பாளையங்கோட்டை- 8.40, திருநெல்வேலி-5, கடனாநதி- 1, ராமாநதி- 15, கருப்பா நதி- 5, அடவிநயினார்- 16, ஆய்குடி- 42.4, தென்காசி- 8.8. அணைகளின் நீர்மட்டம் (கனஅடியில்) பாபநாசம்-52, சேர்வலாறு-63.91, மணிமுத்தாறு-63.85, வடக்குபச்சையாறு-10.25, நம்பியாறு-10.63, கொடுமுடியாறு-14.50, கடனா-36.40, ராமநதி-54.50, கருப்பாநதி-27.89, குண்டாறு-35.87, அடவிநயினார்-71.75.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.