எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு: திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News image
திருப்போரூர் துப்பாக்கிச் சூடு: திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated On :20 ஜூலை 2020, 12:15 pm

DIN


சென்னை: திருப்போரூர் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதயவர்மன் உள்பட 11 பேரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

திருப்போரூர் நிலத்தகராறில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

திருப்போரூர் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்தி கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது, திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் சிலர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. இதில், லட்சுமிபதி மற்றும் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. இதன் பின்னர் எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் எதிர் தரப்பினரை நோக்கி சுட்டுள்ளார்.

இதில், ரியல் எஸ்டேட் அதிபரும் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் கேளம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதயவர்மன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,

இந்த விவகாரத்தில் எம்எல்ஏ இதயவர்மனை சென்னை மற்றும் செங்கல்பட்டு காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.