தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

News image
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
Updated On :22 ஜூலை 2020, 9:25 am

DIN

பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு செய்யப்படும். தற்போதைய கரோனா பரவும் சூழ்நிலை முழுவதுமாக மாறிய பிறகே பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.