சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சின்னசேலத்தில் வியாழக்கிழமை முதல் நான்கு நாள்கள் கடையடைப்பு 

சின்னசேலம் பகுதியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் வணிகர்கள் சங்கத்தினர் முழு கடையடைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :23 ஜூலை 2020, 1:17 pm IST

சின்னசேலம் பகுதியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் வணிகர்கள் சங்கத்தினர் முழு கடையடைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சி பகுதியில், மளிகைக் கடை ஊழியர், மருந்துக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு அண்மையில், கரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து ஆலோசனை மேற்கொண்ட சின்னசேலம் வணிகர் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு கடையடைப்பு மேற்கொள்வது என முடிவு செய்தனர்.

இதனை அடுத்து வியாழக்கிழமை (ஜூலை 23) சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வழக்கம்போல் மருந்தகம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்குகின்றன.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை இந்த முழு கடையடைப்பு தொடரும் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் சின்னசேலம் பகுதி முழுவதும் கடைகள் மூடப்பட்டு பொதுமக்கள், வாகனங்கள் வரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.