அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டன. குடும்ப அட்டைக்கு 5 முகக்கவசங்களும், கிருமிநாசினியும் வழங்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். தமிழக அரசு 2 முகக்கவசங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் 5 அல்லது 6 பேர்கூட உள்ளனர். 2 முகக்கவசம் மட்டும் கொடுத்தால், மற்றவர்கள் என்ன செய்வது. தமிழக அரசு யோசித்து, 5 முகக்கவசமாக வழங்க வேண்டும்.மேலும், சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், எப்படி ரூ.100 கொடுத்து கிருமிநாசினியை வாங்க முடியும். அதனால், தமிழக அரசு குறைந்தபட்சம் சோப்பையாவது வழங்க வேண்டும்.