47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முழு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, முழு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
முழு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Updated On :31 ஜூலை 2020, 7:42 am

DIN

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, முழு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, தனியார் பள்ளிகள் உள்பட கல்வி நிலையங்கள் 40% கட்டணங்களை மட்டுமே வசூலிக்கலாம் என்றும், முழு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.