டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மோட்டார் சைக்கிளில் சென்று நியாயவிலைக் கடையில் அமைச்சர் ஆய்வு: எடையாளர் இடைநீக்கம்

மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்று நியாயவிலைக் கடையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:43 pm

DIN

மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்று நியாயவிலைக் கடையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 

மதுரை பெத்தானியபுரத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ நலத்திட்ட உதவிகளை திங்கள்கிழமை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் தனது குடும்பத்தில் ஐந்து நபர்கள் இருப்பதாகவும் ரேஷன் கடையில் ஒன்பது கிலோ மட்டுமே அரிசி வழங்கியுள்ளதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தார். மேலும் கடை ஊழியர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாமல் விரட்டி அனுப்பி விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து கடை விவரத்தை அந்த பெண்ணிடம் விசாரித்த அமைச்சர் அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பந்த கடைக்கு நேரடியாகச் சென்றார்.  கடைக்குள் பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நபரை  யார் என்று விசாரித்தபோது அவர்  கடைக்குத் தொடர்பு இல்லாதவர் என்பது தெரியவந்தது. அதையடுத்து உடனடியாக அவரை கைது செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். 

நியாய விலை கடையில் பயன்படுத்தப்பட்ட விற்பனை முனைய கருவியில் ஆய்வு செய்தபோது 20 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 9.5 கிலோ மட்டுமே பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து அந்த எடையாளரை பணியிடை நீக்கம் செய்ய கூட்டுறவுத் துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி எனப் காவல்துறை கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.