சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி மன்றத்தின் 9வது வார்டு உறுப்பினரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான முத்துராஜா(48). இவரது மனைவி சுதா, அதே ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினர். தம்பதி இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரே ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களாக அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்துராஜா, ஆத்தூரைச் சேர்ந்த முருகேசன், உளுந்தூர்பேட்டை வீரா, முட்டல் ஜோதிவேல் ஆகியோருடன் ஜீன் 4ந் தேதி கரூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.