தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கரோனா நிவாரணம் வழங்கக் கோரி நாமக்கலில் ஆர்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
நாமக்கல்–பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்
Updated On :9 ஜூன் 2020, 7:20 am

DIN

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.குழந்தான், கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நகர செயலாளர் தம்பிராஜா, பிரதேச செயலாளர் ஜெயமணி   முன்னிலை வகித்தனர். 

இதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பொருள்களை அனைவருக்கும் விலையின்றி வழங்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கவும், வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும். 

ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும். 10–ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் இலவச மின்சார ரத்துக்கு மாநில அரசு துணைபோகக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.