கொல்லிமலையில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சில்வர் ஓக் மரங்கள் நடப்பட்டு மிளகு கொடிகள் படர விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் கூட்டம் மிளகு கொடிகளைச் சேதப்படுத்தி வருகின்றன. கொல்லிமலை வளப்பூர் நாடு இளமாத்திப்பட்டி கிராமப் பகுதிகளில் மிளகு கொடிகளில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இலைகளையும், காய்களையும் நாசப்படுத்தி உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கவலையடைந்தனர்.

தற்போது மிளகு அறுவடைக் காலமாகும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வெட்டுக்கிளிகள் மிளகு கொடிகளை முழுவதும் தின்று வருகிறது. மிளகு கொடி வளர 10 ஆண்டுகள் வரையாகும். இங்குள்ள பழங்குடியின விவசாய மக்கள் மிளகு விளைச்சலை நம்பித்தான் வாழ்வை நடத்துகின்றனர். வெட்டுக்கிளிகள் அட்டகாசம் அதிகரிக்கவே அவற்றை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியது:
கொல்லிமலையில் இரண்டு விவசாயிகளின் மிளகு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவற்றை அழிக்க வேப்ப எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து மிளகு கொடிகளில் அடிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் சாதாரண வகையானது தான். பாலைவன வெட்டுக்கிளிகள் என நினைத்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

”விஜய்னு சொல்லாதீங்க! CM-னு சொல்லுங்க!” துணைப் பேரவைத் தலைவர் ரவிசங்கர்

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா

திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



