அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கொல்லிமலையில் வேப்ப எண்ணெய் கொண்டு வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி தொடக்கம்

கொல்லிமலையில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image

கொல்லிமலை வளப்பூர் நாடு பகுதியில் மிளகு தோட்டத்தில்  வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

Updated On :13 ஜூன் 2020, 3:00 pm IST

கொல்லிமலையில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சில்வர் ஓக் மரங்கள் நடப்பட்டு மிளகு கொடிகள் படர விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் கூட்டம் மிளகு கொடிகளைச் சேதப்படுத்தி வருகின்றன. கொல்லிமலை வளப்பூர் நாடு இளமாத்திப்பட்டி கிராமப் பகுதிகளில் மிளகு கொடிகளில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இலைகளையும், காய்களையும் நாசப்படுத்தி உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கவலையடைந்தனர். 

Story image

தற்போது  மிளகு அறுவடைக் காலமாகும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வெட்டுக்கிளிகள் மிளகு கொடிகளை முழுவதும் தின்று வருகிறது. மிளகு கொடி வளர 10 ஆண்டுகள் வரையாகும். இங்குள்ள  பழங்குடியின விவசாய மக்கள் மிளகு விளைச்சலை நம்பித்தான் வாழ்வை நடத்துகின்றனர். வெட்டுக்கிளிகள் அட்டகாசம் அதிகரிக்கவே அவற்றை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.   

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியது: 
கொல்லிமலையில் இரண்டு விவசாயிகளின் மிளகு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவற்றை அழிக்க வேப்ப எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து மிளகு கொடிகளில் அடிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் சாதாரண வகையானது தான். பாலைவன வெட்டுக்கிளிகள் என நினைத்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.