தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, கம்பம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 7 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம், வடகரையில் ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரின் குடும்பத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண், 55 மற்றும் 17 வயதுடைய இரு பெண்கள் என மொத்தம் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனியில், பாரஸ்ட் சாலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண், சென்னையிலிருந்து வந்த தேனி அம்பேத்கர் வடக்குத் தெருவைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என மொத்தம் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து கம்பத்திற்கு வந்த 60 வயதுடைய தந்தை, 33 வயதுடைய மகன் என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.