ஈரோட்டில் சந்தை மாற்றியமைக்கப்பட்டதைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரோனோ நோய்த் தொற்று பரவாமல் இருக்க காந்திஜி சாலையில் இயங்கி வந்த நேதாஜி காய்கறி சந்தை தற்போது ஈரோடு வ.உ.சி சி பூங்கா மைதானத்தில் மாற்றி அமைத்தனர். இந்த காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனைக்குக் கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. பழைய சந்தையில் பழம் செய்த வியாபாரிகளுக்கு வ.உ.சி பூங்கா மைதானத்தில் கடைகள் ஒதுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து இன்று 200க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாநகராட்சி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் விஜயகுமார் பழ வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் ஒதுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பழ வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிவு

ஒகேனக்கல் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 500 கனஅடி

மேம்பாலத்தில் மோதிய கன்டெய்னா் லாரி; போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



