காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி மோதி கிராம உதவியாளர் பலி

காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி மோதியதில் கிராம உதவியாளர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி மோதி கிராம உதவியாளர் பலி
Updated on
1 min read

காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி மோதியதில் கிராம உதவியாளர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவாக்கம் அருகே பிள்ளையார் சத்திரத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் என் மோகன்தாஸ் (42)இவர் காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் துர்க்கை அம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. 

இந்த விபத்தில் மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். மோகன்தாஸ் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவேடல் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com